பகாங், பெலாங்கை சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இந்த இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர் தலைவர் டான் ஸ்ரீ கானி சலே தெரிவித்துள்ளார். முன்கூட்டியே வாக்களிப்பு, அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறும் என்று இன்று புத்ராஜெயாவில் எஸ்பிஆர் கூட்டத்திற்கு தலைமையேற்றப்பின்னர் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.
பாரிசான் நேஷனலை சேர்ந்த பெலாங்கை சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜோஹாரி ஹாருன் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி சுங்கை பூலோ அருகில் எல்மினாவில் நிகழ்ந்த இலகு ரக விமான விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


