பகாங், பெலாங்கை சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இந்த இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர் தலைவர் டான் ஸ்ரீ கானி சலே தெரிவித்துள்ளார். முன்கூட்டியே வாக்களிப்பு, அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறும் என்று இன்று புத்ராஜெயாவில் எஸ்பிஆர் கூட்டத்திற்கு தலைமையேற்றப்பின்னர் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.
பாரிசான் நேஷனலை சேர்ந்த பெலாங்கை சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜோஹாரி ஹாருன் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி சுங்கை பூலோ அருகில் எல்மினாவில் நிகழ்ந்த இலகு ரக விமான விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


