பகாங், பெலாங்கை சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இந்த இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர் தலைவர் டான் ஸ்ரீ கானி சலே தெரிவித்துள்ளார். முன்கூட்டியே வாக்களிப்பு, அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறும் என்று இன்று புத்ராஜெயாவில் எஸ்பிஆர் கூட்டத்திற்கு தலைமையேற்றப்பின்னர் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.
பாரிசான் நேஷனலை சேர்ந்த பெலாங்கை சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜோஹாரி ஹாருன் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி சுங்கை பூலோ அருகில் எல்மினாவில் நிகழ்ந்த இலகு ரக விமான விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


