May 28, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு மாநிலத்தில் 60 மணி நேரம் தண்ணீர் தடை ஏற்படும்
தற்போதைய செய்திகள்

பினாங்கு மாநிலத்தில் 60 மணி நேரம் தண்ணீர் தடை ஏற்படும்

Share:

ஜார்ஜ்டவுன், மார்ச்.27-

வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை பினாங்கு மாநிலம் முழுவதும் இரண்டரை நாள் அல்லது 60 மணி நேரம் குடிநீர் விநியோகத் தடை ஏற்படும் என்ற பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் அறிவித்துள்ளார்.

அட்டவணையிடப்பட்ட இந்த தண்ணீர் விநியோகத் தடையினால் பினாங்கு மாநிலத்தில் குடிநீர் விநியோகக் கணக்கு வைத்திருக்கும் கிட்டத்தட்ட மூன்று லட்சத்து 41 ஆயிரம் வீடுகளில் தண்ணீர் தடை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

பினாங்கு மாநில குடிநீர் விநியோக முறையின் தரத்தை உயர்த்துவதற்கு 23 வகையான பராமரிப்புப் பணிகளைப் பினாங்கு குடிநீர் விநியோக வாரியம் மேற்கொள்ளவிருக்கிறது.

அந்த வாரித்தின் பராமரிப்புப் பணிகளுக்கு வழிவிடும் வகையில் அட்டவணையிடப்பட்ட தண்ணீர் விநியோகத் தடை 60 மணி நேரத்திற்கு அமல்படுத்தப்படவிருப்பதாக சோவ் கோன் யோவ் விளக்கினார்.

Related News

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்