Mar 15, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு பிரதமர்களை பிரபலப்படுத்துவதற்கு 70 கோடி வெள்ளி செலவிடப்பட்டுள்ளதா ?
தற்போதைய செய்திகள்

இரண்டு பிரதமர்களை பிரபலப்படுத்துவதற்கு 70 கோடி வெள்ளி செலவிடப்பட்டுள்ளதா ?

Share:

நாட்டை வழிநடத்திய இரண்டு பிரதமர்களை பிரபலப்படுத்துவதற்கும், அவர்களை விளம்பரப்படுத்துதற்கும் 70 கோடி வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தனது விசாரணையை தொடங்கியுள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கும், 2022 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஆட்சி செய்த இரண்டு பிரதமர்கள் தலைமையிலான அரசாங்கத்தின் சாதனைகளை விளக்குவதற்கும், அவர்களை முன்னிலைப்படுத்துவதற்கும் கோடிக்கணக்கான வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இக்காலகட்டத்தில் டான்ஸ்ரீ முகைதீன் யாசினும், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பும் பிரதமர்களாக பொறுப்பேற்று இருந்தனர்.

இந்தப் பணம் எவ்வாறு செலவிடப்பட்டது , இதற்கு யார், யார் பொறுப்பேற்று இருந்தனர் என்பது குறித்து ஆராய நிதி அமைச்சு மற்றும் பிரதமர் துறை ஆகியவற்றில் தேவையான தகவல்களையும் ஆதாரங்களையும் திரட்டுவதற்கு SPRM அதிகாரிகள் முழு வீச்சில் விசாரணையை முடுக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து