பெட்டாலிங் ஜெயா, ஜாலான் ஆவான் பெசார், ஓயுஜி சமூக மண்டபம் அருகே சட்டவிரோதமாக பார்க்கிங் கட்டணம் வசூலித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், பெண்ணை தாக்கி மிரட்டியதாக 3 ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
38 வயதான அப்பெண் அளித்த புகாரில், அம்மூவரும் தன்னை வாய்மொழியாக துன்புறுத்தியதுடன், தலையில் குத்தி தாக்கியதாகவும், பணியிடத்தில் இடையூறு ஏற்படுத்துவேன் என மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக, 20 முதல் 26 வயதுக்குட்பட்ட 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அனைவருக்கும் முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இவ்வழக்கானது மிரட்டல் மற்றும் காயம் ஏற்படுத்தியமை தொடர்பான குற்றவியல் சட்டம் பிரிவு 506, 323 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.








