May 22, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டுத் தம்பதியர் காப்பாற்றப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டுத் தம்பதியர் காப்பாற்றப்பட்டனர்

Share:

ஈப்போ, சாம் போ டோங் குகை கோவிலில் சிக்கிக்கொண்ட வெளிநாட்டு சுற்றுப்பயண தம்பதியரை , தீயணைப்பு, மீட்புப்படையினர் இன்று பாதுகாப்பாக மீட்டனர்.

அந்த குகை கோவிலை சுற்றிப் பார்ப்பதற்காக சென்ற அந்த வெளிநாட்டுத் தம்பதியர், குகையிலிருந்து வெளியேற முடியாமல் வழிதவறியிருக்கலாம் என்று அஞ்சப்பட்டது.

பிற்பகல் 2.26 மணியளவில் கிடைக்கப்பெற்ற ஓர் அவசரப் அழைப்பைத் தொடர்ந்த அந்த தம்பதியரைய தேடும் பணி முடுக்கி விடப்பட்டதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது தெரிவித்தார்.

எனினும் அந்த சீன நாட்டு ஆடவரும், தென்கொரியா நாட்டுப்பெண்ணும் குகையின் ஒரு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டனர். குகையின் பிரதான கதவு மூடப்பட்டதன் காரணமாக அவர்களால் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர் என்பது தெரியவந்துள்ளது என்று சபரோட்ஸி நோர் அகமது குறிப்பிட்டார்.

Related News