கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்ததில் பெண் மருத்துவர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்சம்பவம் இன்று காலை 10.45 மணியளவில் சரவாக், முக்கா, தஞ்ஜோங் மானீஸ், ஜாலான் செர்டாங் என்ற இடத்தில் நிகழ்ந்தது.
டாக்டர் கோரீன் யாங் என்று அடையாளம் கூறப்பட்ட அந்த மருத்துவர், எவ்வித காயமின்றி உயிர் தப்பியதாக தீயணைப்பு மீட்புப்படையினர் தெரிவித்தனர்.
தனியொரு நபராக அந்த மருத்துவர், தஞ்சோங் மானிஸிலிருந்து சிபுவை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related News

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது

முன்னாள் வங்கி நிர்வாகி கைது: எஸ்பிஆர்எம் நடவடிக்கை


