Mar 16, 2026
Thisaigal NewsYouTube
எதிர்த் திசையில் 150 கி.மீ பயணம்! போதை லாரி ஓட்டுநரால் பெரும் பரபரப்பு!
தற்போதைய செய்திகள்

எதிர்த் திசையில் 150 கி.மீ பயணம்! போதை லாரி ஓட்டுநரால் பெரும் பரபரப்பு!

Share:

ஷா ஆலாம், நவம்பர்.30-

ஒரு மர்ம லாரி ஓட்டுநர், அதிகாலையில் புக்கிட் பெருந்தோங் சுங்கச் சாவடியிலிருந்து சுங்கை பூலோ வரை சுமார் 150 கிலோமீட்டர் தூரத்திற்கு எதிர்த் திசையில் அபாயகரமாக வாகனத்தை ஓட்டிச் சென்று பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். லாரியை நிறுத்த முயன்ற காவற்படையின் வாகனத்தை ஓட்டுநர் இடிக்க முயன்றதால், அந்தப் பகுதியில் சில மணி நேரம் பெரும் பரபரப்பு நீடித்தது.

லாரி ஓட்டுநரைத் துரத்திச் சென்று பிடித்த காவற்படையினர், அவரைத் தாமான் பூங்கா ராயா, புக்கிட் பெருந்தோங் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்தனர். லாரியும் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட ஓட்டுநரின் சிறுநீர்ப் பரிசோதனையில் ஷாபு போதைப்பொருள் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாகச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக உலு சிலாங்கூர் காவற்படையின் தலைவர் சுப்ரிண்டெண்டன் இப்ராஹிம் ஹுசேன் தகவல் வெளியிட்டார்.

Related News