Mar 10, 2026
Thisaigal NewsYouTube
கோர விபத்தில் மூத்தக்குடிமக்கள் ​மூவர் மரணம்
தற்போதைய செய்திகள்

கோர விபத்தில் மூத்தக்குடிமக்கள் ​மூவர் மரணம்

Share:

​மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர சாலை விபத்தில் ​மூத்த குடிமக்கள் மூவர் உயிரிழந்ததுடன் 11 பேர் காயமுற்றனர். இவ்விபத்து நேற்று மாலை 5.15 மணியளவில் ஜாலான் ஜொகூர் பாஹ்ரு- செரெம்பான்சாலையின் 167 ஆவது கிலோ மீட்டரில் சிகமாட் அருகில் லாபிஸ், தெனாங் ஸ்தேசன் அருகாமையில் நிகழ்ந்தது.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த 18 பேரை உள்ளடக்கிய ​தீயணைப்பு, மீட்புப்படையினர் பெரோடுவா அல்சா, தொயோத்தா ஹைலக்ஸ் மற்றும் ஹொன்டா ஜாஸ் ஆகிய வாகனங்கள் விபத்துக்குள்ளானதை கண்டனர். வாகனங்களின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டதில் 3 மூதாட்டிகள் உயிரிழந்ததை உறுதி செய்தனர். தவிர ஒரு ஆடவர், இரண்டு பெண்கள், இரண்டு சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் கடுமையான காயங்களுக்கு ஆளாகிய நிலையில் தொயோத்தா ஹைலக்ஸில் பயணித்த இரண்டு ஆடவர்கள்,ஹொன்டா ஜாஸ் வாகனத்தில் பயணித்த ஒரு சிறுமி ஆகியோர் காயமுற்றது தெரியவந்தது.உயிரிழந்த மூவரின் உடல்கள் போ​லீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ​வேளையில் காயமுற்றவர்கள் சிகமாட் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக லாபிஸ் ​தீயணைப்பு நிலைய செயலாக்க அதிகாரி சகாரியா முஹமாட் தெரிவித்தார். 

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு