May 12, 2026
Thisaigal NewsYouTube
ஆயுதப்படைகளுக்கான இராணுவ கொள்முதல் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் - தற்காப்பு அமைச்சு உறுதி
தற்போதைய செய்திகள்

ஆயுதப்படைகளுக்கான இராணுவ கொள்முதல் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் - தற்காப்பு அமைச்சு உறுதி

Share:

ஆயுதப்படைகளுக்கான இராணுவ உபகரணங்கள் கொள்முதல் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதை மலேசிய தற்காப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

நிதி கசிவு அல்லது தவறான பயன்படுத்தலைத் தடுக்க மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், தற்போது அனைத்து கொள்முதல் நடவடிக்கைகளும் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாக தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.

பத்து 3 முகாமில் இன்று நடைபெற்ற ஆயுதப்படைகளுக்கான மடானி பொருளாதாரத் திட்ட நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது எந்தத் தடையும் அமலில் இல்லை என்றும், நிதி முறைகேடுகளைத் தடுக்கும் அமைப்புகளை தாங்கள் செயல்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இராணுவத்தின் முக்கியச் செயல்பாடுகளும், அதன் தயார்நிலையும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், கொள்முதல் தடை குறித்துத் தனது அமைச்சு நிதியமைச்சுடன், கலந்தாலோசித்து வருவதாக காலிட் தெரிவித்திருந்தார்.

மேலும், முன்னாள் உயர்மட்ட ஆயுதப்படைத் தலைவர்கள் பலர் மீது சுமத்தப்பட்ட ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இந்த தடையானது அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News

ஹாண்டா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை - டபிள்யூ.எச்.ஓ அறிவிப்பு

ஹாண்டா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை - டபிள்யூ.எச்.ஓ அறிவிப்பு

 இந்தியப் பெண்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மூலம் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும்: டத்தோ அ.சிவநேசன் அழைப்பு

இந்தியப் பெண்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மூலம் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும்: டத்தோ அ.சிவநேசன் அழைப்பு

தேடப்பட்டு வந்த 19 வயது மாணவரின் உடல் படாஸ் ஆற்றில் மிதந்தது

தேடப்பட்டு வந்த 19 வயது மாணவரின் உடல் படாஸ் ஆற்றில் மிதந்தது

கருகலைப்பில் பெண் உயிரிழந்த வழக்கு: முன்னாள் கிளினிக் ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது

கருகலைப்பில் பெண் உயிரிழந்த வழக்கு: முன்னாள் கிளினிக் ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது

விஜயின் எழுச்சி மக்கள் போராட்டத்தின் மகத்தான வெற்றி - அமைச்சர் ரமணன் கருத்து

விஜயின் எழுச்சி மக்கள் போராட்டத்தின் மகத்தான வெற்றி - அமைச்சர் ரமணன் கருத்து

பினாங்கில் தமிழ் இடைநிலைப்பள்ளிக்காக 4 ஏக்கர் நிலம் தயார் - மத்திய அரசிடம் விண்ணப்பிக்காதது ஏன்? - குமரன் கிருஷ்ணன் கேள்வி

பினாங்கில் தமிழ் இடைநிலைப்பள்ளிக்காக 4 ஏக்கர் நிலம் தயார் - மத்திய அரசிடம் விண்ணப்பிக்காதது ஏன்? - குமரன் கிருஷ்ணன் கேள்வி

ஆயுதப்படைகளுக்கான இராணுவ கொள்முதல் நடவடிக்கைகளுக்கு விதிக... | Thisaigal News