நாட்டில் தற்போது நிலவி வரும் வெப்ப வானிலை காரணமாக அவசர கால பிரகடனத்தை அறிவிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். எனினும் தற்போதைக்கு அவசர காலத்தை அறிவிப்பது தொடர்பில் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று புத்ராஜெயா, பெர்டானா புத்ராவில் பேரிடர் நிர்வாக நடவடிக்கைக்குழு கூட்டத்திற்கு தலைமையேற்றப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அகமட் ஜாஹிட் இதனை தெரிவித்தார். கடந்த மே 10 ஆம் தேதி மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மேட் மலேசியா அறிவிப்பின்படி கெடா மாநிலத்தில் , பாலிங்கிலும், பேராவில் கிந்தா, உலு பேராக் மற்றும் மஞ்சோங்கிலுல் சுட்டெரிக்கும் வெயிலினால் முதல் கட்ட எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்


