கோலக்கிள்ளான் துறைமுகத்திலிருந்து ஆஸ்திரேலியா, பிரிஸ்பேனுக்கு கொள்கலன் மூலம் 78 கோடியே 95 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 336 கிரோ எடை கொண்ட ஹெரோயின் போதைப்பொருள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மலேசிய சுங்கத்துறை முழு வீச்சில் விசாரணை மேற்கொண்டு வருவதாக சுங்கத்துறை துணை இயக்குநர் டத்தோ சஸாலி முஹம்மட் தெரிவித்துள்ளார்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் உத்தரவின்படி , இந்த கடத்தல் தொடர்பான விசாரணை அறிக்கை 2 வாரங்களில் தயாரிக்கப்பட்டு விடும் என்றும், அது வரையில் எந்தவொரு தகவலும் வெளியிட இயலாது என்று சஸாலி முஹம்மட் குறிப்பிட்டார்.
மிகப்பெரிய அளவிலான இந்தப் போதைப்பொருள் கடத்தலில் மலேசிய சுங்கத்துறை அதிகாரிகள் சிலர் சம்பந்தப்பட்டிருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படுவதாக சஸாலி முஹம்மட் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


