ஷா ஆலம் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி, இரண்டாம் படிவ மாணவர் ஒருவரை, சக மாணவர் 10 செ.மீ நீளமுள்ள வளைந்த கத்தியால் கையில் குத்தியதாகக் கூறப்படுகின்றது.
இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் சாருடின் சமாஹ், மாணவரின் கையில் லேசான காயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சந்தேக நபரான அம்மாணவர் கைது செய்யப்பட்டு, பின்னர் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இச்சம்பவத்துக்கான காரணம் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை என்றும், அம்மாணவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இச்சம்பவமானது ஆபத்தான ஆயுதம் மூலம் காயம் ஏற்படுத்தியதாக குற்றவியல் சட்டம் பிரிவு 324-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.








