Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பிரதமர் தொடர்ந்து கருத்துரைக்க மறுப்பு
தற்போதைய செய்திகள்

பிரதமர் தொடர்ந்து கருத்துரைக்க மறுப்பு

Share:

நாட்டின் துணைப்பிரதமராக தாம் பொறுப்பு வகித்த காலத்தில் சொத்துகளை குவித்துக்கொண்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து கருத்துரைக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்து விட்டார்.
இவ்விவகாரத்தை பேசுவதற்கே தமக்கு சோம்பலாக உள்ளது என்று அன்வார் குறிப்பிட்டார். இன்று செர்டாங்கில் சுகாதார அமைச்சு நடத்திய ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பிரதமர் அன்வார், செய்தியாளர்களின் கேள்விக்கு மேற்கணடவாறு பதில் அளித்தார். இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் Dr Zaliha Mustafa கலந்து கொண்டார்.

Related News