May 28, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் சுட்டுக் கொலை: 9 குண்டர்கள் கைது
தற்போதைய செய்திகள்

ஆடவர் சுட்டுக் கொலை: 9 குண்டர்கள் கைது

Share:

ஜோகூர் பாரு, மார்ச்.27-

கடந்த ஜனவரி மாதம் ஜோகூர் பாரு, தாமான் செத்தியா இண்டாவில் உள்ள ஓர் உணவகத்தில் மிக நெருக்கமான இடைவெளியில் ஆடவர் ஒருவர், அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டச் சம்பவம் தொடர்பில் குண்டர் கும்பலைச் சேர்ந்த ஒன்பது சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 8 ஆம் தேதி தொடங்கி, 17 ஆம் தேதி வரை ஜோகூர் பாருவில் பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனை நடவடிக்கையில், 36 க்கும் 66 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

இந்த ஒன்பது பேரையும் பிடிப்பதற்கு முன்னதாக, இந்த கொலை தொடர்பில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 64 வயது நபரை, போலீசார் மேற்கொண்ட முதலாவது சோதனை நடவடிக்கையின் போது சுட்டுக் கொன்றதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.

கடந்த மார்ச் 8 ஆம் தேதி அதிகாலை 3.10 மணியளவில் ஜோகூர் பாரு, தாமான் மோலேக்கில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 64 வயது நபரை, போலீசார் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். எனினும் அந்த நபர், போலீசாரை நோக்கி துப்பாக்கியினால் சுடத் தொடங்கியதைத் தொடர்ந்து அந்த நபரை சம்பவ இடத்திலேயே போலீசார் சுட்டுக் கொன்றதாக கமிஷனர் டத்தோ குமார் விளக்கினார்.

Related News

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்