Apr 2, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் சுட்டுக் கொலை: 9 குண்டர்கள் கைது
தற்போதைய செய்திகள்

ஆடவர் சுட்டுக் கொலை: 9 குண்டர்கள் கைது

Share:

ஜோகூர் பாரு, மார்ச்.27-

கடந்த ஜனவரி மாதம் ஜோகூர் பாரு, தாமான் செத்தியா இண்டாவில் உள்ள ஓர் உணவகத்தில் மிக நெருக்கமான இடைவெளியில் ஆடவர் ஒருவர், அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டச் சம்பவம் தொடர்பில் குண்டர் கும்பலைச் சேர்ந்த ஒன்பது சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 8 ஆம் தேதி தொடங்கி, 17 ஆம் தேதி வரை ஜோகூர் பாருவில் பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனை நடவடிக்கையில், 36 க்கும் 66 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

இந்த ஒன்பது பேரையும் பிடிப்பதற்கு முன்னதாக, இந்த கொலை தொடர்பில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 64 வயது நபரை, போலீசார் மேற்கொண்ட முதலாவது சோதனை நடவடிக்கையின் போது சுட்டுக் கொன்றதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.

கடந்த மார்ச் 8 ஆம் தேதி அதிகாலை 3.10 மணியளவில் ஜோகூர் பாரு, தாமான் மோலேக்கில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 64 வயது நபரை, போலீசார் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். எனினும் அந்த நபர், போலீசாரை நோக்கி துப்பாக்கியினால் சுடத் தொடங்கியதைத் தொடர்ந்து அந்த நபரை சம்பவ இடத்திலேயே போலீசார் சுட்டுக் கொன்றதாக கமிஷனர் டத்தோ குமார் விளக்கினார்.

Related News

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்