வரும் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் 6 மாநிலங்களுக்கான தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியில் உள்ள மாநில மக்கள், இத்தேர்தலை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாநில ஆட்சியில் தொடர்ந்து சேதம் ஏற்படுவதை தடுக்க மக்கள் விவேகமாக முடிவெடுக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார். பெரிக்காத்தான் நேஷனலிடமிருந்து நமது மாநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும். மலாய்க்கார்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்களின் நலனை கருத்தில் கொண்டு, பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஒரு போதும் வெற்றி வாய்ப்புக்குரிய ஒரு சிறு இடத்தையும் தவறி வழங்கி விட வேண்டாம் என்று வாக்காளர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
நம்பிக்கை, திறமை மற்றும் தூய்மையான அரசாங்கம் வேண்டும் என்று வலியுறுத்தும் இவர்கள் நீதிமன்றத்திற்கு நடந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள்தான் நாட்டை காப்பாற்றப் போகிறார்களா? என்று பினாங்கில் நடைபெற்ற ஜலஜாஹ் பெர்படுவான் மடானி செராமாவில் உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்ட வினாவை எழுப்பினார்.

தற்போதைய செய்திகள்
மாநில ஆட்சியில் சேதம் ஏற்படாமல் இருக்க விவேகமாக வாக்களியுங்கள் - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கோரிக்கை
Related News

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

சீனப் புத்தாண்டு: 150 கூடுதல் விமானங்கள் - ஒருவழிப் பயணக் கட்டணம் அதிகபட்சம் 600 ரிங்கிட்டாக நிர்ணயம்

கூட்டரசு பிரதேச தினம் - தைப்பூசம் ஒரே நாளில்: அரசு ஊழியர்கள் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையைப் பின்பற்ற கியூபெக்ஸ் அறிவுறுத்தல்


