கோலாலம்பூர், நவ.9-
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் நிர்ணயம் இல்லாத வானிலை மத்தியில் பொது மக்கள் கடற்கரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு மலேசிய கடல் சார் அமலாக்க ஏஜென்சி அறிவுறுத்தியுள்ளது.
தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்காலக்கட்டத்தில் கடற்கரை நடவடிக்கைகள் இடர்களுக்கு வழிவகுக்கலாம் என்று மலேசிய கடல் சார் அமலாக்க ஏஜென்சியின் தலைமை இயக்குநர் லக்சமணா மூடா டத்தோ முகமட் ரோஸ்லி அப்துல்லா ஆலோசனைக்கூறியுள்ளார்.








