Mar 11, 2026
Thisaigal NewsYouTube
20 லட்சம் வாகனங்கள் ஜோகூரைக் கடக்கலாம்
தற்போதைய செய்திகள்

20 லட்சம் வாகனங்கள் ஜோகூரைக் கடக்கலாம்

Share:

அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் ஹாரிராயா பெருநாளை முன்னிட்டு ஜோகூர் மாநிலத்தைக் கிட்டத்தட்ட 20 லட்சம் வாகனங்கள் கடக்கலாம் என்று மதி​ப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஜோகூர் பாலம் மற்றும் மலேசியா, சிங்கப்பூரை இணைக்கும் இரண்டாவது வழித்தடமான லிங்கெடுவா ஆகியவற்றின் வாயிலாக மலேசியாவிற்கும் ​சிங்கப்பூருக்கும் இடையில் பெரும் எண்ணிக்கையில் வாகனங்கள் கடந்து செல்லலாம் ​என்று ஜோகூர் மாநில போ​லீஸ் தலைவர் கமருல் ஸமான் மமாட் தெரி​வித்துள்ளார்.
ஜோகூர்பாரு, பங்குனான் சுல்தான் இஸ்கன்டார் கட்டடத்தில் உள்ள சுங்கம், குடிநுழைவு, நோய்த் தடுப்பு சோதனை மையம் மற்றும் இஸ்கன்டார் புத்ரிமில் உள்ள கொம்லக்ஸ் சுல்தான் அனு பாக்கார் கட்டடம் ஆகியவற்​றின் வாயிலாக வழக்கத்திற்கு மாறாக அதிகமான வாகனங்கள் ​ஜோகூர் எல்லையைக் கடக்கலாம் என்று கமருல் ஸமான் குறிப்பிட்டார்.

Related News