அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் ஹாரிராயா பெருநாளை முன்னிட்டு ஜோகூர் மாநிலத்தைக் கிட்டத்தட்ட 20 லட்சம் வாகனங்கள் கடக்கலாம் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஜோகூர் பாலம் மற்றும் மலேசியா, சிங்கப்பூரை இணைக்கும் இரண்டாவது வழித்தடமான லிங்கெடுவா ஆகியவற்றின் வாயிலாக மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் பெரும் எண்ணிக்கையில் வாகனங்கள் கடந்து செல்லலாம் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமருல் ஸமான் மமாட் தெரிவித்துள்ளார்.
ஜோகூர்பாரு, பங்குனான் சுல்தான் இஸ்கன்டார் கட்டடத்தில் உள்ள சுங்கம், குடிநுழைவு, நோய்த் தடுப்பு சோதனை மையம் மற்றும் இஸ்கன்டார் புத்ரிமில் உள்ள கொம்லக்ஸ் சுல்தான் அனு பாக்கார் கட்டடம் ஆகியவற்றின் வாயிலாக வழக்கத்திற்கு மாறாக அதிகமான வாகனங்கள் ஜோகூர் எல்லையைக் கடக்கலாம் என்று கமருல் ஸமான் குறிப்பிட்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


