அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் ஹாரிராயா பெருநாளை முன்னிட்டு ஜோகூர் மாநிலத்தைக் கிட்டத்தட்ட 20 லட்சம் வாகனங்கள் கடக்கலாம் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஜோகூர் பாலம் மற்றும் மலேசியா, சிங்கப்பூரை இணைக்கும் இரண்டாவது வழித்தடமான லிங்கெடுவா ஆகியவற்றின் வாயிலாக மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் பெரும் எண்ணிக்கையில் வாகனங்கள் கடந்து செல்லலாம் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமருல் ஸமான் மமாட் தெரிவித்துள்ளார்.
ஜோகூர்பாரு, பங்குனான் சுல்தான் இஸ்கன்டார் கட்டடத்தில் உள்ள சுங்கம், குடிநுழைவு, நோய்த் தடுப்பு சோதனை மையம் மற்றும் இஸ்கன்டார் புத்ரிமில் உள்ள கொம்லக்ஸ் சுல்தான் அனு பாக்கார் கட்டடம் ஆகியவற்றின் வாயிலாக வழக்கத்திற்கு மாறாக அதிகமான வாகனங்கள் ஜோகூர் எல்லையைக் கடக்கலாம் என்று கமருல் ஸமான் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போவில் நோன்பைத் தவிர்த்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 முஸ்லிம்கள் கைது

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி


