அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் ஹாரிராயா பெருநாளை முன்னிட்டு ஜோகூர் மாநிலத்தைக் கிட்டத்தட்ட 20 லட்சம் வாகனங்கள் கடக்கலாம் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஜோகூர் பாலம் மற்றும் மலேசியா, சிங்கப்பூரை இணைக்கும் இரண்டாவது வழித்தடமான லிங்கெடுவா ஆகியவற்றின் வாயிலாக மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் பெரும் எண்ணிக்கையில் வாகனங்கள் கடந்து செல்லலாம் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமருல் ஸமான் மமாட் தெரிவித்துள்ளார்.
ஜோகூர்பாரு, பங்குனான் சுல்தான் இஸ்கன்டார் கட்டடத்தில் உள்ள சுங்கம், குடிநுழைவு, நோய்த் தடுப்பு சோதனை மையம் மற்றும் இஸ்கன்டார் புத்ரிமில் உள்ள கொம்லக்ஸ் சுல்தான் அனு பாக்கார் கட்டடம் ஆகியவற்றின் வாயிலாக வழக்கத்திற்கு மாறாக அதிகமான வாகனங்கள் ஜோகூர் எல்லையைக் கடக்கலாம் என்று கமருல் ஸமான் குறிப்பிட்டார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


