Mar 22, 2026
Thisaigal NewsYouTube
லோரி ஓட்டுநருக்கு ஜாமீன் அனுமதி கிடைத்தது
தற்போதைய செய்திகள்

லோரி ஓட்டுநருக்கு ஜாமீன் அனுமதி கிடைத்தது

Share:

புத்ராஜெயா, செப்டம்பர்.08-

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு மணரம் ஏற்படும் அளவிற்கு வாகனத்தைச் செலுத்தியதற்காக எட்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள லோரி ஓட்டுநரை ஜாமீனில் விடுவிப்பதற்கு புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

தனது தண்டனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கும் லோரி ஓட்டுநரான Y. வெற்றிவேலுவின் மேல்முறையீட்டின் முடிவு தெரியும் வரையில் அவரை ஜாமீனில் விடுவிப்பதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமட் ஸைனி மஸ்லான் தெரிவித்தார்.

வெற்றிவேலுவை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 10 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிப்பதாக டத்தோ முகமட் ஸைனி குறிப்பிட்டார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி இரவு 10.20 மணியளவில் பேரா, சுங்கை சிப்புட்டில் ஜாலான் ஈப்போ-கோல கங்சார் சாலையில் மிக ஆபத்தான முறையில் கனரக வாகனத்தைச் செலுத்தி நால்வருக்கு மரணம் விளைவித்த குற்றத்திற்காக சுங்கை சிப்புட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த 2023 ஆண்டு வெற்றிவேலுவிற்கு 5 ஆண்டு சிறையும் 80 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதித்தது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து