May 27, 2026
Thisaigal NewsYouTube
இரு கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தற்போதைய செய்திகள்

இரு கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Share:

மலாக்கா, டிச.28-


மலாக்கா, பண்டார் ஹிலிரில் பிரபல பேரங்ககாடி கட்டடத்தில் உள்ள நகைக்கடைக்குள் நுழைந்த ஆயுதமேந்திய இரண்டு முகமூடி கொள்ளைர்கள், நகைகளை பெருவாரியாக கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இத்துணிகரச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நிகழ்ந்தது.

முகமூடி மற்றும் கறுப்பு நிற ஜேக்கெட்டை அணிந்திருந்த அந்த இரு கொள்ளையர்களும், நகைக்கடையில் இரண்டு பெண் பணியாளர்களை ஆயுதமுனையில் அச்சுறுத்துவதை, அந்த நகைக்கடையில் பொருத்தப்பட்டு இருந்த ரகசிய கேமரா பதிவில் தெரியவந்ததுள்ளது.

முகமூடி கொள்ளையர்களை கண்டதும், அந்த இரு பெண்களும் பயத்தால் நடுங்கிய வேளையில் இரு கொள்ளையர்களின் ஒருவன், நகைகள் வைக்கப்பட்ட கண்ணாடி பேழை மீது ஏறி, உட்பகுதிக்குள் நுழைந்து நகைகளை கொள்ளையிட்டுள்ளான்.

இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பத்திட் இவ்விவகாரம் இன்னமும் விசாரணையில் இருந்து வருவதாக குறிப்பிட்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு