Jun 22, 2026
Thisaigal NewsYouTube
ஊடகங்கள் நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும் முக்கியப் சகாக்கள் : துணை அமைச்சர் ஆர். யுனேஸ்வரன் நெகிழ்ச்சி
தற்போதைய செய்திகள்

ஊடகங்கள் நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும் முக்கியப் சகாக்கள் : துணை அமைச்சர் ஆர். யுனேஸ்வரன் நெகிழ்ச்சி

Share:

தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் ஆர். யுனேஸ்வரன் இராமராஜ், இன்று மாலை கோலாலம்பூர் வெஸ்டீன் ஹோட்டலில் ஊடகவியலாளர்களுடனான சிறப்புத் தேநீர் உபசரிப்புச் சந்திப்பை நடத்தினார்.

மலாய், ஆங்கிலம், சீனம், தமிழ் மற்றும் டிஜிட்டல் தளங்களைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட இந்தச் சந்திப்பில், நாட்டின் பல்லின சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பை அவர் வெகுவாகப் பாராட்டினார்.

ஊடகங்களை வெறும் செய்தி ஊடகமாக மட்டும் பார்க்காமல், மக்களிடையே நிலவும் புரிதல் இடைவெளிகளைக் குறைத்து, பரஸ்பர மரியாதை மற்றும் 'மலேசியா மடானி' கொள்கையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வியூக சகாக்களாக ஊடகவியலாளர்கள் விளங்குகிறார்கள் என்று துணை அமைச்சர் யுனேஸ்வரன் வெகுவாக போற்றினார்.

தற்போதைய சவாலான தகவல் தொழில்நுட்பக் காலத்தில், துல்லியமான மற்றும் பொறுப்புணர்ச்சி மிக்க செய்திகளை வழங்குவதில் ஊடகங்களின் பங்கு இன்றியமையாதது என்றும், தேசிய ஒற்றுமைத்துறையின் தூதுவர்களாகச் செயல்படும் ஊடகங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான நல்லுறவு தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் துணை அமைச்சர் யுனேஸ்வரன் தமது உரையில் கேட்டுக்கொண்டார்.

Related News

700-க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் 500 ரிங்கிட்டாக உயர்த்தப்பட வாய்ப்பு

700-க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் 500 ரிங்கிட்டாக உயர்த்தப்பட வாய்ப்பு

16 ஆவது பொதுத் தேர்தலுக்குள்  30% பெண் வேட்பாளர்கள்: புதிய வரைவுச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தன சமூக அமைப்புகள்

16 ஆவது பொதுத் தேர்தலுக்குள் 30% பெண் வேட்பாளர்கள்: புதிய வரைவுச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தன சமூக அமைப்புகள்

செப்டம்பருக்குள் மலாக்கா மாநிலத் தேர்தல் நடைபெற வாய்ப்பு

செப்டம்பருக்குள் மலாக்கா மாநிலத் தேர்தல் நடைபெற வாய்ப்பு

ஏஐ தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படும் துறைகளை அடையாளம்கண்டு மறுபயிற்சி அளிக்க அரசாங்கம் நடவடிக்கை

ஏஐ தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படும் துறைகளை அடையாளம்கண்டு மறுபயிற்சி அளிக்க அரசாங்கம் நடவடிக்கை

குழந்தை மற்றும் பணிப்பெண்கள் மீதான தாக்குதல் வழக்கு: 5 பேர் குற்றச்சாட்டுகளை மறுப்பு

குழந்தை மற்றும் பணிப்பெண்கள் மீதான தாக்குதல் வழக்கு: 5 பேர் குற்றச்சாட்டுகளை மறுப்பு

அடுத்த திங்கட்கிழமை முதல் எல்.ஆர்.டி 3 ஷா ஆலாம் வழித்தடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறப்பு

அடுத்த திங்கட்கிழமை முதல் எல்.ஆர்.டி 3 ஷா ஆலாம் வழித்தடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறப்பு