May 28, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரியிடம் 5 மணி நேரம் விசாரணை
தற்போதைய செய்திகள்

முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரியிடம் 5 மணி நேரம் விசாரணை

Share:

புத்ராஜெயா, மார்ச்.13-

தனது முன்னாள் அதிகாரிகளின் வீட்டில் 170 மில்லியன் ரிங்கிட் ரொக்கமும், 70 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள தங்கக் கட்டிகளும், இன்னும் சில விலை உயர்ந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் இன்று சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தியதாக தெரியவந்துள்ளது.

புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் இன்று காலை 10 மணிக்கு விசாரணைக்கு உட்பட்ட இஸ்மாயில் சப்ரி, பிற்பகல் 3 மணிக்கு விடுவிக்கப்பட்டார். அவரின் கார் பிற்பகல் 3.15 மணியளவில் எஸ்பிஆர்எம் தலைமை அலுவலகக் கட்டத்திலிருந்து வெளியேறிறது.

காலையில் எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு நுழையும் போது, தனது காரின் கண்ணாடியை இறக்கி செய்தியாளர்களை நோக்கி மிக உற்சாகமாகக் கையசைத்த இஸ்மாயில் சப்ரி, புறப்படும் போது, எந்தவொரு சமிக்ஞையையும் காட்டவில்லை.

65 வயதான இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான விசாரணை நாளை வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு மீண்டும் தொடங்குகிறது. எனினும் இந்த விசாரணை இன்னும் எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்பது உறுதியாகத் தெரியவில்லை.

இஸ்மாயில் சப்ரியின் உடல் நிலையைப் பொறுத்து, அவரின் விசாரணை நாட்கள் முடிவு செய்யப்படும் என்று எஸ்பிஆர்எம் வட்டாரம் தெரிவித்துள்ளது.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்