முன்னாள் கல்வி அமைச்சரும், பெரிக்காத்தான் நேஷனலின் முன்னணி தலைவருமான டாக்டர் ராட்ஸி ஜிடின் னுடன் தொடர்புபடுத்தப்பட்ட 8 கோடி வெள்ளி லஞ்ச ஊழல் சம்பந்தப்பட்ட விசாரணையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் அதிகமான ஆதாரங்களை கைப்பற்றியுள்ளதாக அதன் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்துள்ளார்.
பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியில் ராட்ஸி ஜிடின் கல்வி அமைச்சராக இருந்த போது பாடப் புத்தகங்கள் அச்சடிப்பதற்கு 8 கோடி வெள்ளி தொடர்புடைய குத்தகையை தமது மனைவி நலன் சார்ந்த ஒரு நிறுவனத்திற்கு வழங்கியதாக அந்த புத்ராஜெயா எம்.பி., ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை எதிர்நோக்கியுள்ளார்.
இவ்விவகாரம் இன்னமும் விரிவான விசாரணையில் இருந்த போதிலும் இந்த லஞ்ச ஊழல் தொடர்பில் நிறைய ஆதாரங்களை எஸ்.பி.ஆர்.எம் கைப்பற்றியுள்ளதாக அஸாம் பாக்கி தெளிவுபடுத்தியுள்ளார்.








