Dec 3, 2025
Thisaigal NewsYouTube
போதைப் பொருள் விநியோகக் கும்பல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

போதைப் பொருள் விநியோகக் கும்பல் முறியடிப்பு

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.25-

ஜோகூர் பாருவில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சோதனை நடவடிக்கைகளில் ஒரு காதல் ஜோடி உட்பட மூவர் கைது செய்யப்பட்டது மூலம் தாமான் டெலிமா 2 இல் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் செயல்பட்டு வந்த போதைப் பொருள் விநியோகிப்புக் கும்பலைப் போலீசார் முறியடித்துள்ளனர் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹ்மான் ஆர்ஷாட் தெரிவித்தார்.

இதன் மூலம் 35 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள பல வகையான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்காகப் போதைப் பொருளை விநியோகிக்கும் நடவடிக்கையில் அந்த காதல் ஜோடி ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு 10.35 மணியளவில் ஜோகூர் பாரு, தாமான் செந்தோசாவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் அந்த காதல் ஜோடி பிடிபட்டனர்.

அவர்களிடமிருந்து எக்ஸ்டசி வகையைச் சேர்ந்த போதைப் பொருள் என்று நம்பப்படும் மூன்று போத்தல்களில் 1.5 லிட்டர் திரவம் கைப்பற்றப்பட்டது. தாமான் செந்தோசாவில் ஜாலான் சுதெரா 3- இல் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையில் ஓர் உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்டதுடன் மேலும் பல போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டது. அந்த நபர் வேதியியலாளர் என்பது தெரிய வந்துள்ளது என்று டத்தோ அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்