தென்மேற்கு பருவமழை மற்றும் எல் நினோ நிகழ்வின் விளைவுகளை எதிர்கொள்ள மாநிலம் மற்றும் கூட்டாச்சி நிலைகளில் அனைத்து வசதிகளிலும் முழுமையான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு செய்துள்ளதாக அதன் அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.
தற்போது அதிகரித்து வரும் வெப்ப நிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சையை வழங்க அனைத்து சுகாதார வசதிகளும் நன்கு அமைக்கப்பட்டுள்ளன என்று டாக்டர் ஜாலிஹா முஸ்தபா மேலும் விவரித்தார். அதிக வெப்பநிலை தொடர்பான அறிகுறிகள் கண்டறியப்பட்டால் உடனடியாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுமாறு மக்களுக்கு ஜாலிஹா முஸ்தபா அறிவுறுத்தினார்.
வரும் மே 15 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கவிருப்பதால், மலேசியர்கள் வறண்ட நாட்களையும் குறைந்த மழையையும் சந்திக்க நேரலாம என நேற்று மேட் மலேசியா எனப்படும் மலேசிய வானிலை ஆய்வுத்துறை அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, டாக்டர் ஜாலிஹா முஸ்தபா இதனை தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்


