தென்மேற்கு பருவமழை மற்றும் எல் நினோ நிகழ்வின் விளைவுகளை எதிர்கொள்ள மாநிலம் மற்றும் கூட்டாச்சி நிலைகளில் அனைத்து வசதிகளிலும் முழுமையான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு செய்துள்ளதாக அதன் அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.
தற்போது அதிகரித்து வரும் வெப்ப நிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சையை வழங்க அனைத்து சுகாதார வசதிகளும் நன்கு அமைக்கப்பட்டுள்ளன என்று டாக்டர் ஜாலிஹா முஸ்தபா மேலும் விவரித்தார். அதிக வெப்பநிலை தொடர்பான அறிகுறிகள் கண்டறியப்பட்டால் உடனடியாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுமாறு மக்களுக்கு ஜாலிஹா முஸ்தபா அறிவுறுத்தினார்.
வரும் மே 15 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கவிருப்பதால், மலேசியர்கள் வறண்ட நாட்களையும் குறைந்த மழையையும் சந்திக்க நேரலாம என நேற்று மேட் மலேசியா எனப்படும் மலேசிய வானிலை ஆய்வுத்துறை அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, டாக்டர் ஜாலிஹா முஸ்தபா இதனை தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


