தென்மேற்கு பருவமழை மற்றும் எல் நினோ நிகழ்வின் விளைவுகளை எதிர்கொள்ள மாநிலம் மற்றும் கூட்டாச்சி நிலைகளில் அனைத்து வசதிகளிலும் முழுமையான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு செய்துள்ளதாக அதன் அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.
தற்போது அதிகரித்து வரும் வெப்ப நிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சையை வழங்க அனைத்து சுகாதார வசதிகளும் நன்கு அமைக்கப்பட்டுள்ளன என்று டாக்டர் ஜாலிஹா முஸ்தபா மேலும் விவரித்தார். அதிக வெப்பநிலை தொடர்பான அறிகுறிகள் கண்டறியப்பட்டால் உடனடியாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுமாறு மக்களுக்கு ஜாலிஹா முஸ்தபா அறிவுறுத்தினார்.
வரும் மே 15 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கவிருப்பதால், மலேசியர்கள் வறண்ட நாட்களையும் குறைந்த மழையையும் சந்திக்க நேரலாம என நேற்று மேட் மலேசியா எனப்படும் மலேசிய வானிலை ஆய்வுத்துறை அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, டாக்டர் ஜாலிஹா முஸ்தபா இதனை தெரிவித்தார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


