Mar 13, 2026
Thisaigal NewsYouTube
தெலுக் இந்தானில் 41 கிரிப்டோ இயந்திரங்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

தெலுக் இந்தானில் 41 கிரிப்டோ இயந்திரங்கள் பறிமுதல்

Share:

ஈப்போ, ஜனவரி.10-

தெலுக் இந்தானில் சட்டவிரோத கிரிப்டோ சுரங்க நடவடிக்கைகளுக்கு எதிராக போலீசார் மேற்கொண்ட சோதனையில் 41 இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நேற்றிரவு தெலுக் இந்தானில் மூன்று வெவ்வேறு இடங்களில் இச்சோதனைகள் நடத்தப்பட்டன. முதல் சோதனையில் 24 இயந்திரங்களும், அடுத்தடுத்த சோதனைகளில் முறையே 9 மற்றும் 8 இயந்திரங்களும் என மொத்தம் 41 கிரிப்டோ சுரங்க இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த இயந்திரங்கள் மின்சாரத் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், மின்சார விநியோகத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் நம்பப்படுகிறது.

இச்சோதனையின் போது இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதில் தொடர்புடைய நபர்களைக் கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று ஹிலீர் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி டாக்டர் பக்ரி ஸைனால் அபிடின் தெரிவித்தார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்