Dec 4, 2025
Thisaigal NewsYouTube
உளவுத்துறையின் இரு அதிகாரிகள் கைது:  நாட்டின் பாதுகாப்பு குறித்து பிரதமர் அச்சம்
தற்போதைய செய்திகள்

உளவுத்துறையின் இரு அதிகாரிகள் கைது: நாட்டின் பாதுகாப்பு குறித்து பிரதமர் அச்சம்

Share:

புத்ராஜெயா, ஆகஸ்ட்.22-

மலேசிய தற்காப்பு உளவுத்துறையின் இரண்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டது தொடர்பில் நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அச்சம் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பில் நாட்டின் தேசிய பாதுகாப்பு அம்சங்களை மறுபரிசீலனை செய்யுமாறு தற்காப்பு அமைச்சுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

மலேசிய தற்காப்பு உளவுத்துறையில் பணியாற்றி வரும் இரண்டு உளவுத்துறை அதிகாரிகள், அண்மையில் தென் மாநிலத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மினால் கைது செய்யப்பட்ட 10 பேரில் அடங்குவர்.

கைது செய்யப்பட்டுள்ள 10 பேரில் இருவர் தற்காப்பு அமைச்சின் உளவுத்துறையில் முக்கிய அதிகாரிகளாகப் பணியாற்றி வந்தவர்கள் ஆவர்.

இருவரின் கைது, தேசிய பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் தமது கவலையைத் தெரிவித்துள்ளார் என்று அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.

இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்யுமாறு தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ காலிட் நோர்டினுக்கு உத்தரவிட்டுள்ளார் என்று தொடர்புத்துறை அமைச்சரான டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்