Jul 2, 2026
Thisaigal NewsYouTube
பூலாவ் இண்டா தொழிற்பேட்டையில் சோதனை: 662 வெளிநாட்டவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

பூலாவ் இண்டா தொழிற்பேட்டையில் சோதனை: 662 வெளிநாட்டவர்கள் கைது

Share:

கிள்ளான், செப்டம்பர்.25-

கிள்ளான், பூலாவ் இண்டா, தொழிற்பேட்டைப் பகுதியில் சிலாங்கூர் மாநில குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனையில் 662 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நேற்று புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த தொழிற்பேட்டைப் பகுதியில் வேலை செய்து வந்த ஆயிரத்து 132 வெளிநாட்டவர்களிடம் சோதனை நடத்தப்பட்டதாக சிலாங்கூர் மாநில இயக்குநர் கைருல் அமினுஸ் கமாருடின் தெரிவித்தார்.

பிடிபட்டவர்களில் பெரும்பகுதியினர் வங்காளதேசப் பிரஜைகள் ஆவர். மொத்தம் 545 பேர் கைது செய்யப்பட்டனர். தவிர மியன்மாரைச் சேர்ந்த 35 பேரும், நேப்பாளத்தைச் சேர்ந்த 24 பேரும், இந்தியாவைச் சேர்ந்த 10 பேரும், இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டனர்.

குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக 662 பேர் கைது செய்யப்பட்டதாக கைருல் அமினுஸ் குறிப்பிட்டார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்