Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பூலாவ் இண்டா தொழிற்பேட்டையில் சோதனை: 662 வெளிநாட்டவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

பூலாவ் இண்டா தொழிற்பேட்டையில் சோதனை: 662 வெளிநாட்டவர்கள் கைது

Share:

கிள்ளான், செப்டம்பர்.25-

கிள்ளான், பூலாவ் இண்டா, தொழிற்பேட்டைப் பகுதியில் சிலாங்கூர் மாநில குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனையில் 662 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நேற்று புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த தொழிற்பேட்டைப் பகுதியில் வேலை செய்து வந்த ஆயிரத்து 132 வெளிநாட்டவர்களிடம் சோதனை நடத்தப்பட்டதாக சிலாங்கூர் மாநில இயக்குநர் கைருல் அமினுஸ் கமாருடின் தெரிவித்தார்.

பிடிபட்டவர்களில் பெரும்பகுதியினர் வங்காளதேசப் பிரஜைகள் ஆவர். மொத்தம் 545 பேர் கைது செய்யப்பட்டனர். தவிர மியன்மாரைச் சேர்ந்த 35 பேரும், நேப்பாளத்தைச் சேர்ந்த 24 பேரும், இந்தியாவைச் சேர்ந்த 10 பேரும், இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டனர்.

குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக 662 பேர் கைது செய்யப்பட்டதாக கைருல் அமினுஸ் குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்