Mar 12, 2026
Thisaigal NewsYouTube
நாங்கள் இடைத்தரகர்களை நியமிக்கவில்லை !
தற்போதைய செய்திகள்

நாங்கள் இடைத்தரகர்களை நியமிக்கவில்லை !

Share:

தேசியப் பதிவிலாகா யாரையும் தங்களின் நிகராளிகளாகவோ, முகவர்களாகவோ அல்லது இடைத் தரகர்களையோ நியமிக்க வில்லை எனக் கூறியுள்ளது.

நாட்டில் இருக்கும் தங்களில் 212 அலுவலகங்களுக்கும் பொது மக்கள் நேரடியாக வந்து சேவைகளைப் பெறலாம் என அதன் தலைமை இயக்குநர் சம்ரி மிஸ்மான் குறிப்பிட்டுள்ளார்.

தேசியப் பதிவிலாகாவின் சேவைகளைக் கட்டணம் செலுத்தி சில ஆவணங்களை பெற உதவும் தரப்பு எனக் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் சிலர் விளம்பரம் செய்து வருவதை அத்துறை அடையாளம் கண்டுள்ளது.

மலேசியாவின் விதிமுறைகளையும் நடைமுறைகளையும் அறிந்திடாத வெளிநாட்டு வாசிகளையும் சில உள்நாட்டு வாசிகளையும் இந்த கும்பல் குறிவைத்து செயல்பட்டு வருகின்றது.

அந்த வலைத்தளத்தில் பயன்படுத்தப்படும் இலாகாவின் அதிகாரப்பூர்வ சின்னம் என்பதால் பலர் அதனை அதிகாரப்பூர்வ நடவடிக்கை என நம்புகிறார்கள் என சம்ரி மிஸ்மான் கூறினார்.

அதிகாரத்துவத்தினர் அந்தக் கும்பலைப் பின் தொடர்ந்து வந்து நடவடிக்கை எடுத்து விடக் கூடாது என்பதற்காக குறுகிய கால விளம்பரங்களைப் பதிவேற்றம் செய்யப்படுகிறதாக அவர் தெரிவித்தார்.

இது போன்ற விதிமுறைக்குப் புறம்பான செயல்பாடுகள் குறித்து சமூக வலைத்தளப் பயனர்கள் தங்களுக்குத் தகவல் தெரிவிப்பதன் மூலம், அவை முடக்கப்பட வழி வகை செய்யும் என சம்ரி மிஸ்மான் மேலும் கூறினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!