Aug 9, 2026
Thisaigal NewsYouTube
கேவின் கொலை வழக்கில் முன்னாள் மருத்துவருக்கு தொடர்பில்லை
தற்போதைய செய்திகள்

கேவின் கொலை வழக்கில் முன்னாள் மருத்துவருக்கு தொடர்பில்லை

Share:

கோலாலம்பூர், மார்ச்.13-

முன்னாள் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் காலஞ்சென்ற டத்தோ அந்தோணி கேவின் மோராயிஸ் கொலையில் முன்னாள் உடற்கூறு மருத்துவ நிபுணரான கர்னல் R. குணசேகரனை தொடர்புபடுத்த எந்த ஆதாரமும் இல்லை என்று கூட்டரசு நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

குற்றம் நடந்த இடத்தில் அல்லது தடயங்கள் சேகரிக்கப்பட்ட இடங்களில் குணசேகரன் ஆஜராகியுள்ளார் என்பதற்கு எந்தவொரு சாட்சியமும் இல்லை என்று அவரின் வழக்கறிஞர் டத்தோ என். சிவானந்தன் தெரிவித்தார்.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்ற ஐந்து பேருடன் தனது கட்சிக்காரர் கொலை தொடர்புடைய நோக்கத்தை பகிர்ந்துக் கொண்டார் என்பதற்கு அரசு தரப்பில் எந்தவொரு சாட்சியமும் நிரூபிக்கப்படவில்லை என்று வழக்கறிஞர் சிவானந்தன் வாதிட்டார்.

குற்றவாளி ஒருவரின் சாட்சியம், பின்னர் அவர் அரசு தரப்பு சாட்சியாக மாறி, குணசேகரனைக் குற்றவாளியாக்கியது.

ஆனால், இந்த கொலையில் குணசேகரன் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதற்கு ஓர் ஊகக் கோட்பாட்டின் அடிப்படையில் சொல்லப்பட்டதே தவிர அதற்கான ஆதாரங்களை பிராசிகியூஷன் நிரூபிக்கத் தவறியது என்று வழக்கறிஞர் சிவானந்தன் தமது வாதத்தில் தெரிவித்தார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து