Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஒற்றுமை அரசாங்கம் நம்பிக்கையற்றது முகைதீன் யாசீன் வர்ணித்துள்ளார்
தற்போதைய செய்திகள்

ஒற்றுமை அரசாங்கம் நம்பிக்கையற்றது முகைதீன் யாசீன் வர்ணித்துள்ளார்

Share:

தற்போது, பொருளாதாரம் கையாளப்படும் விதம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வட்டி விகிதங்களின் உயர்வு மற்றும் மந்தமான புர்சா மலேசியாவைப் பற்றி நிறைய முணுமுணுப்புகள் எழுந்துள்ளதாகாவும், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் நிர்வாகத்தை நம்பிக்கையற்றது என்றும் பெரிகாத்தா நேஷனல் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் வர்ணித்துள்ளார்.
அவர் பிரதமராக பொறுப்பேற்பதற்கு முன் 100 நாட்கள் வாய்ப்பு வழங்கும்படி கேரிக்கை விடுத்தார். ஆனால், அந்த 100 நாட்களுக்குள் என்னதான் நடந்தது? பிரதமர் என்ன செய்யத் திட்டம் தீட்டியுள்ளார் என்பதை அறிந்து கொள்ள பொதுமக்களும் விரும்புகிறார்கள் என்று ஃப்எம்தி செய்தி ஊடகத்துடன் நடைபெற்ற சந்திப்பின் போது முகைதீன் யசீன் இதனை தெரிவித்தார்.
மேலும், நாட்டை நிர்வகிக்க முடியும் என்பதை காட்டுவதற்கு பிரதமர் அன்வார் இதுவரை எதையும் போதுமான அளவு செய்யவில்லை என்றும், வெளிநாடுகளுக்கு பயணம் செல்கிறாரே தவிர , நாட்டில் நிலவி வரும் பிரச்னைகளில் கவனம் செலுத்த வில்லை என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான டத்தோ ஶ்ரீ அன்வாரை, முகைதீன் யாசின் குற்றஞ்சாட்டினார்.

Related News