கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி லுமூட்டில் அரச மலேசிய கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டதில் 10 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று பூர்வாங்க விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
விபத்துக்கு முன்னதாக, அந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் பறப்பதற்கு பாதுகாப்பானதாகவும் இரண்டு விமானிகளின் உடல் நிலை நன்றாக இருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர, விபத்தில் சம்பந்தப்பட்டுள்ள விமானிகள், அந்த ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கு தகுதியானவர்கள் என்றும் பறப்பதற்கு செல்லத்தக்க அனுமதியை கொண்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் அரச மலேசிய கடற்படையை சேர்ந்த லெப்டினன்ட் சிவசுதன் தஞ்சப்பன் உட்பட பத்து வீரர்கள் சம்பவ இடத்திலேயே மாணடனர்.








