Jul 4, 2026
Thisaigal NewsYouTube
பிரதமரின் அறிவிப்பு சனிக்கிழமை பேரணியைப் பாதிக்காது
தற்போதைய செய்திகள்

பிரதமரின் அறிவிப்பு சனிக்கிழமை பேரணியைப் பாதிக்காது

Share:

அலோர் ஸ்டார், ஜூலை.23-

மக்களுக்கான ரொக்க உதவித் தொகை மற்றும் பெட்ரோல் விலையைக் குறைத்தல் முதலிய சலுகைகளைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்த போதிலும், இது, வரும் ஜுலை 26 ஆம் தேதி சனிக்கிழமை கோலாலம்பூரில் நடத்தப்படவிருக்கும் துருன் அப் பேரணியை பாதிக்கச் செய்யாது என்று கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் சனூசி முகமட் நோர் தெரிவித்தார்.

பிரதமரின் இந்த அறிவிப்பானது, பேரணியில் மக்கள் திரள்வதைத் தவிர்க்கும் நோக்கத்தைக் கொண்டது என்பதுடன் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூட்டைத் தணிக்கச் செய்யும் முயற்சியாகும் என்று பாஸ் கட்சியின் தேர்தல் இயக்குநருமான சனூசி கூறினார்.

பிரதமரின் இந்த உதவித் திட்டங்கள் மீதான அறிவிப்பு, ஆக்கப்பூர்வமானது என்ற போதிலும் மடானி அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கு களமாக அமையவிருக்கும் இந்தப் பேரணியில் மக்கள் கூடுவதை ஒரு போதும் தடுக்காது என்று சனூசி குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது