Aug 9, 2026
Thisaigal NewsYouTube
3 அந்நிய நாட்டவர்களை போலீசார் சுட்டுக் கொன்றனர்
தற்போதைய செய்திகள்

3 அந்நிய நாட்டவர்களை போலீசார் சுட்டுக் கொன்றனர்

Share:

சிப்பாங், மார்ச்.14-

கொள்ளையர்கள் என்று நம்பப்படும் 3 அந்நிய நாட்டவர்களை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

இன்று அதிகாலையில் சிலாங்கூர், சிப்பாங், டேசா விஸ்தாவில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்த அந்த மூன்று கொள்ளையர்களும் சுட்டுக் கொல்லப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை துணை இயக்குநர் பாஃடில் மர்சுஸ் தெரிவித்தார்.

சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் கோலாலம்பூர் ஆகிய மூன்று மாநிலங்களில் ஆயுதமேந்திய நிலையில் குறைந்த பட்சம் 17 கொள்ளைச் சம்பவங்களுக்கு இந்த கொள்ளையர்கள் காரணமானவர்கள் என்று நம்பப்படுவதாக பாஃடில் மர்சுஸ் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட கொள்ளையர்களின் இலக்குரிய வீட்டில் நுழைந்த போது, ஆபத்து, அவசர அலார சத்தம் ஒலிக்கத் தொடங்கிய போது , வீட்டின் உரிமையாளர் உஷாரானார். இது குறித்து தகவல் கிடைத்து போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு விரைந்த போது, அந்த கொள்ளைக் கும்பல், போலீசாரைப் பார்த்ததும் பாராங்கினால் தாக்க முற்பட்டனர்.

அப்போது போலீசார் மேற்கொண்ட பதிலடித் தாக்குதலில், அந்த மூன்று கொள்ளையர்களும் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக பாஃடில் மர்சுஸ் தெரிவித்தார்.

இந்த கொள்ளைக் கும்பலில் மொத்தம் ஐவர் சம்பந்தப்பட்டுள்ளனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சங்கிலித் தொடரைப் போன்று இக்கும்பல் நடத்திய கொள்ளைச் சம்பவங்களினால் மொத்தம் பத்து லட்சம் ரிங்கிட் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாஃடில் மர்சுஸ் குறிப்பிட்டார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து