நவ. 27-
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கும் முன்னாள் பொருளாதாரத் தலைமைச் செயலாளர் Tan Sri Mohd Irwan Serigar Abdullahவும் 6.6 பில்லியன் ரிங்கிட் அரசு நிதி மோசடி வழக்கில் இருந்து மலேசிய உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. இருப்பினும், அவர்கள் குற்றமற்றவர்கள் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. நீதிபதி Datuk Muhammad Jamil Hussin, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு இந்த ஆணையை பிறப்பித்தார்.
இந்த முடிவு குறித்து நீதிபதி Datuk Muhammad Jamil Hussin கூறுகையில், அரசு வழக்கு தொடர்வதில் சில குறைபாடுகள் இருப்பதால், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவிக்க ஆணையிடப்பட்டுள்ளது . இந்த ஆணையானது, அரசு மீண்டும் வழக்கு தொடரக் குறுக்கிடாது என்றும் அவர் கூறினார். கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வழக்கில், பலமுறை விசாரணை தள்ளிப்போனது. இந்தக் காலதாமதம் ஒரு நீண்ட கால தாமதமாகும் என்றார்.








