கோலாலம்பூர், ஆகஸ்ட் 04-
ஆயிரக்கணக்கானோர் திரண்ட இந்த ஆதரவு பேரணியில் அனைவரும் வெள்ளை நிற உடையுல் காணப்பட்டனர். நீள்திரையில் மலேசியா பாலஸ்தீன் கொடிகள் காட்டப்பட்ட போது பலர் கண்கலங்கினார் . இன்னும் சிலர், கொடிகளை கைளில் அசைத்துக்கொண்டு , பாலஸ்தீன் மக்களுக்கே தங்கள் ஆதரவு என முழங்கிய போது அந்த Axiata Arena அரங்ககே அதிர்ந்து.
காசா-வில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக கட்டவழிக்கப்பட்டுள்ள அட்டுழியங்களை ஒரு முடிவுக்கு கொண்டு வரவும், அண்மையில் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மாயில் ஹனிஎஹ் கொலை செய்யப்பட்டதை கண்டிக்கவும் இந்த பேரணி கூட்டப்பட்டது.
சிறார்கள், வயதானவர்கள் என பல்வேறு பின்னணியைக் கொண்டவர்கள் கலந்து கொண்ட இந்த பேரணியில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார், இரவு 9.10 மணிக்கு அரங்கில் நுழைந்தார்.
பிரதமருடன் துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி, பிகேர் தலைமைச் செயலாளர் டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுட்டியோன் இஸ்மாயில் ,கட்சிதலைவர் டத்தோ ஸ்ரீ சாபு நாடாளுமன்ற சபா நாயகர் தன் ஸ்ரீ ஜோஹாரி அப்துல் உட்பட முக்கியத் தலைவர்கள் காணப்பட்டனர்.








