Jul 31, 2026
Thisaigal NewsYouTube
அரசு ஊழியர்கள் சொகுசாக இருப்பதாக அளவுக்கு மீறி எண்ணம் கொள்ள வேண்டாம் - பிரதமர் நினைவுறுத்து
தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர்கள் சொகுசாக இருப்பதாக அளவுக்கு மீறி எண்ணம் கொள்ள வேண்டாம் - பிரதமர் நினைவுறுத்து

Share:

அரசு ஊழியர்கள் தாங்கள் வகிக்கின்ற பதிவியில் மிகவும் சொகுசான நிலையில் இருப்பதாக சிந்திக்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் எனவும், தற்போது செய்து கொண்டிருக்கும் வேலை முழுமையடைந்து விட்டதாகவும் கருத வேண்டாம் எனவும் நினைக்க வேண்டாம்.

தாம் உட்பட ஒவ்வோர் அரசு ஊழியரும் நாட்டை நிர்வகிப்பதில் தொடர்ந்து சிறந்து விளங்க எப்போதும் பாடுபட வேண்டும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இபுராகிம் தெரிவித்தார்.

தாங்கள் ஆற்றிவரும் பணியை அவ்வாபோது மேம்படுத்தவும் தவறுகள் இருப்பின் அவற்றைத் திருத்திக் கொள்ளவும் வேண்டும் எனவும் அவர் சொன்னார்.

அரசுத்துறையில் இணைது விட்டால், நாம் சிறந்தவர் என்று நினைத்து விடக் கூடாது. எப்போதும் பணிவுடன் சிறப்பான சேவையை வழங்க கடினமாக உழைக்க வேண்டும் என அவர் மேலும் சொன்னார்.

Related News