பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சிலாங்கூர் மாநில குடிநுழைவுத் துறை நடத்திய ' ஒப்ஸ் ஆம்னிபிரசன்ட் ' நடவடிக்கையில் மொத்தம் 137 பேர் சோதனை செய்யப்பட்டனர். இருப்பினும், விதிமீறல்கள் ஏதும் கண்டறியப்படாததால் யாரும் கைது செய்யப்படவில்லை.
குடிநுழைவுத்துறை குடிவரவுத் துறை இயக்குநர் கைரூல் அமினுஸ் கமாருடின் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் இந்தச் சோதனை தொடங்கியது. குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஸ்ரீ மூடா நவீன சந்தை, செக்சன் 15-ல் உள்ள டத்தாரான் ஓட்டோமொபில், செக் ஷன் 17-ல் உள்ள பேருந்து நிலையம் மற்றும் பாடாங் ஜாவா ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் தீவிர ஆவணச் சோதனையில் ஈடுபட்டனர்.
வெளிநாட்டினரின் குடியிருப்பு அந்தஸ்தைச் சரிபார்க்கவும், குடிநுழைவு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அவர் தெளிவுபடுத்தினார்.








