Mar 23, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பக்கப்  இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் வெற்றி பெறுவார்.
தற்போதைய செய்திகள்

சுங்கை பக்கப் இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் வெற்றி பெறுவார்.

Share:

நிபோங் தெபால், ஜூலை 03-

வருகின்ற சனிக்கிழமை நடைபெறவுள்ள பினாங்கு, சுங்கை பக்கப் இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் வெற்றி பெறுவார். சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் டக்டார் ஜோஹ்ரி அரிபின் வெற்றி பெறுவார் என துணைப்பிரதமர் டத்தோ செரி அஹ்மத் ஜாஹித் ஹமிடி நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

அத்தொகுதியிலுள்ள இளம் வாக்காளர்களைக் கவர, தேசிய முன்னணி மற்றும் அம்னோவின் தேர்தல் பணிப்படைகள் கையாண்டுள்ள சில அணுகுமுறைகள், அந்த நம்பிக்கையை அளித்திருப்பதாக, அம்னோ தலைவருமான அவர் கூறினார்.

சுங்கை பக்கப் சட்டமன்ற தொகுதியில் ஐயாயிரத்து 105 அம்னோ உறுப்பினர்கள் வாக்காளர்களாக உள்ளனர்.

இடைத்தேர்தலுக்கான வேட்பாளராக பக்காத்தான் ஹாராப்பான்-ன்னைச் சேர்ந்த ஜோஹ்ரி அரிபின்- னின் பெயர் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, அத்தரப்பினரின் ஆதரவைக் கவரும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை, ஜாஹித் ஹமிடி சுட்டிக்காட்டினார்.

Related News