தங்களின் சொந்த பெயரில் மின்சாரக் கட்டணத்திற்கான கணக்கை திறப்பதற்கு சந்தாதார்கள் இனி வைப்புத்தொகையை செலுத்த வேண்டியதில்லை. அதேவேளையில் மின்சாரக் கட்டணத்திற்கு , இலக்குக்கு உரிய மக்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து உதவித் தொகையை வழங்கி வரும்.
தவிர வறிய நிலையில் உள்ளவர்களின் வீட்டிற்கான மின்சாரக் கட்டணத்திற்கு அரசாங்கம் மாதம் தோறும் தொடர்ந்து 40 வெள்ளி கட்டண கழிவை வழங்கி வரும்.








