Aug 12, 2026
Thisaigal NewsYouTube
வீட்டை விட்டு வெளியேறியவர், காணவில்லை
தற்போதைய செய்திகள்

வீட்டை விட்டு வெளியேறியவர், காணவில்லை

Share:

குவாந்தான், மே.21-

கடந்த மே 14 ஆம் தேதி குவாந்தான், புக்கிட் உபியில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறிய ஓர் இந்திய இளைஞர், கடந்த ஒரு வார காலமாக வீடு திரும்பவில்லை என்று போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

36 வயது பாலமுருகன் தண்டபாணி என்ற அந்த இளைஞர், சம்பவத்தன்று பிற்பகல் 2 மணியளவில் வெளியே சென்று வருவதாகக் கூறிப் புறப்பட்டவர், இதுவரை வீடு திரும்பாதது குறித்து அவரது மனைவியும், குடும்பத்தினரும் மிகுந்த அச்சம் கொள்வதாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் ஸாஹாரி வான் புசு தெரிவித்தார்.

கைப்பேசியோ அல்லது அடையாள ஆவணமோ எதனையும் அவர் எடுத்துச் செல்லவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஓர் இந்தியப் பிரஜையை தனது வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டுள்ள பாலமுருகன், கடந்த 18 ஆண்டு காலமாக மளிகைக் கடை நடத்தி வந்துள்ளார்.

கடன் தொல்லைக் காரணமாக, மளிகைக் கடையை மூடிவிட்டார். இந்நிலையில் பாலமுருகன் குறித்து அவரின் நண்பர்களிடம் விசாரித்த போது, எந்தத் தகவலும் இல்லை என்று ஏசிபி வான் முகமட் ஸாஹாரி குறிப்பிட்டார்.

பாலமுருகனைப் பார்த்தவர்கள் அல்லது அவர் இருக்கும் இடம் தெரிந்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு ஏசிபி வான் முகமட் ஸாஹாரி பொது மக்களின் உதவியை நாடியுள்ளார்.

Related News

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு