Feb 23, 2026
Thisaigal NewsYouTube
நோன்பு திறப்பு அழைப்பிதழ் மற்றும் சலுகை இணைப்புகள்: பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீஸ் துறை அறிவுறுத்தல்
தற்போதைய செய்திகள்

நோன்பு திறப்பு அழைப்பிதழ் மற்றும் சலுகை இணைப்புகள்: பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீஸ் துறை அறிவுறுத்தல்

Share:

ஷா ஆலாம், பிப்ரவரி.23-

சமூக ஊடகங்களில் பகிரப்படும் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் 'நோன்பு திறப்பு' அழைப்பிதழ்கள் அல்லது சலுகைகள் தொடர்பான இணைய இணைப்புகளை அழுத்த வேண்டாம் என அரச மலேசியப் படை பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வணிகக் குற்ற விசாரணைத் துறையின் இயக்குநர் டத்தோ ருஸ்டி முஹமட் இசா கூறுகையில், இதுவரை இத்தகைய போலி இணைப்புகள் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்தப் புகாரும் வரவில்லை என்றாலும், ரமலான் மாதத்தை முன்னிட்டு இத்தகைய மோசடிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக போலீஸ் துறை கருதுகிறது.

இலவச நோன்பு திறப்பு விருந்து, ரமலான் நன்கொடைகள் அல்லது சிறப்பு அழைப்பிதழ்கள் என்ற பெயரில் போலி இணைப்புகளை அனுப்பி, மக்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கித் தகவல்களைத் திருட மோசடிக்காரர்கள் முயலக்கூடும்.

அடையாளம் தெரியாத அல்லது சந்தேகத்திற்குரிய ஆதாரங்களிலிருந்து வரும் எந்தவோர் இணைப்பையும் பொதுமக்கள் அழுத்த வேண்டாம். மேலும், தங்களின் வங்கி ரகசியக் குறியீடு , டிஏசி (TAC) எண் அல்லது ஏடிஎம் கார்டு விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம் என டத்தோ ருஸ்டி அறிவுறுத்தியுள்ளார்.

Related News

கோலாலம்பூர்  ஊராட்சி மன்றத் தேர்தல் குறித்த ஆய்வு: மார்ச் இறுதி வரை தொடரும் என ஹன்னா இயோ தகவல்

கோலாலம்பூர் ஊராட்சி மன்றத் தேர்தல் குறித்த ஆய்வு: மார்ச் இறுதி வரை தொடரும் என ஹன்னா இயோ தகவல்

வலுவான ரிங்கிட் மற்றும் சீர்திருத்தங்கள்: ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைத்தன்மைக்குச் சான்று - ஃபாமி ஃபாட்சீல்

வலுவான ரிங்கிட் மற்றும் சீர்திருத்தங்கள்: ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைத்தன்மைக்குச் சான்று - ஃபாமி ஃபாட்சீல்

அஸாம் பாக்கியின் பங்கு விவகாரம்: விவாத மனுவை நிராகரித்தார் சபாநாயகர் ஜொஹாரி அப்துல்

அஸாம் பாக்கியின் பங்கு விவகாரம்: விவாத மனுவை நிராகரித்தார் சபாநாயகர் ஜொஹாரி அப்துல்

வேலை வாய்ப்புத் திறனை மேம்படுத்த பெர்கேசோ மூலம் 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: டத்தோ ஶ்ரீ ரமணன்

வேலை வாய்ப்புத் திறனை மேம்படுத்த பெர்கேசோ மூலம் 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: டத்தோ ஶ்ரீ ரமணன்

பதவி துஷ்பிரயோகம்: திரங்கானு ஆட்சிக்குழு உறுப்பினர் நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்

பதவி துஷ்பிரயோகம்: திரங்கானு ஆட்சிக்குழு உறுப்பினர் நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்

இந்து ஆலயங்களை முறைப்படுத்த 4 வண்ணக் கட்டமைப்பு: தேசிய இந்து ஆலயங்கள் ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பு

இந்து ஆலயங்களை முறைப்படுத்த 4 வண்ணக் கட்டமைப்பு: தேசிய இந்து ஆலயங்கள் ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பு