Jun 29, 2026
Thisaigal NewsYouTube
நோன்பு திறப்பு அழைப்பிதழ் மற்றும் சலுகை இணைப்புகள்: பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீஸ் துறை அறிவுறுத்தல்
தற்போதைய செய்திகள்

நோன்பு திறப்பு அழைப்பிதழ் மற்றும் சலுகை இணைப்புகள்: பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீஸ் துறை அறிவுறுத்தல்

Share:

ஷா ஆலாம், பிப்ரவரி.23-

சமூக ஊடகங்களில் பகிரப்படும் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் 'நோன்பு திறப்பு' அழைப்பிதழ்கள் அல்லது சலுகைகள் தொடர்பான இணைய இணைப்புகளை அழுத்த வேண்டாம் என அரச மலேசியப் படை பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வணிகக் குற்ற விசாரணைத் துறையின் இயக்குநர் டத்தோ ருஸ்டி முஹமட் இசா கூறுகையில், இதுவரை இத்தகைய போலி இணைப்புகள் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்தப் புகாரும் வரவில்லை என்றாலும், ரமலான் மாதத்தை முன்னிட்டு இத்தகைய மோசடிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக போலீஸ் துறை கருதுகிறது.

இலவச நோன்பு திறப்பு விருந்து, ரமலான் நன்கொடைகள் அல்லது சிறப்பு அழைப்பிதழ்கள் என்ற பெயரில் போலி இணைப்புகளை அனுப்பி, மக்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கித் தகவல்களைத் திருட மோசடிக்காரர்கள் முயலக்கூடும்.

அடையாளம் தெரியாத அல்லது சந்தேகத்திற்குரிய ஆதாரங்களிலிருந்து வரும் எந்தவோர் இணைப்பையும் பொதுமக்கள் அழுத்த வேண்டாம். மேலும், தங்களின் வங்கி ரகசியக் குறியீடு , டிஏசி (TAC) எண் அல்லது ஏடிஎம் கார்டு விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம் என டத்தோ ருஸ்டி அறிவுறுத்தியுள்ளார்.

Related News

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

பகடிவதை செய்ததாக 6 மாணவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடி நீக்கம் - மாரா தலைவர் உத்தரவு

பகடிவதை செய்ததாக 6 மாணவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடி நீக்கம் - மாரா தலைவர் உத்தரவு