Dec 5, 2025
Thisaigal NewsYouTube
மியூசியம் நெகாராவை இலவசமாகச் சுற்றிப் பார்க்கலாம்
தற்போதைய செய்திகள்

மியூசியம் நெகாராவை இலவசமாகச் சுற்றிப் பார்க்கலாம்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.05-

நாட்டின் தேசிய பொருட்காட்சி சாலையான மியூசியம் நெகாராவை பொதுமக்கள் நாளை நவம்பர் 6 ஆம் தேதி சனிக்கிழமையும், நாளை மறுநாள் நவம்பர் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் இலவசமாகச் சுற்றிப் பார்க்கலாம் என தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

மடானி அரசாங்கம் நாட்டிற்குத் தலைமையேற்று சரியாக மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பொதுமக்களுக்கு இந்தச் சிறப்புச் சலுகையை தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு வழங்கியுள்ளது.

நாட்டின் வரலாறு மற்றும் தேசத்தின் அடையாளத்தை வடிவமைத்த பாரம்பரியம் ஆகியவற்றைப் போற்றும் அதே வேளையில் மலேசியர்கள் குறிப்பாக இளையோர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மியூசியம் நெகாராவிற்குத் திரளாக வருகை அளிப்பதை ஊக்குவிக்கும் நோக்கில் இரண்டு தினங்களுக்கு நுழைவுக் கட்டணம் விதிக்கப்படாது என்று தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

மியூசியம் நெகாரா காலை 9 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 5 மணிக்கு மூடப்படும்.

Related News

மலாக்காவில் 3 இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: வெளிப்படையான விசாரணைக்குப் பிரதமர் உத்தரவு

மலாக்காவில் 3 இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: வெளிப்படையான விசாரணைக்குப் பிரதமர் உத்தரவு

ஓரினப்புணர்ச்சிக்கு வழிவிடும் சோனா குளியல்: 7 ஆண்கள் மீது குற்றச்சாட்டு

ஓரினப்புணர்ச்சிக்கு வழிவிடும் சோனா குளியல்: 7 ஆண்கள் மீது குற்றச்சாட்டு

இந்திராகாந்தியைச் சந்திக்க ஐஜிபி தொடர்ந்து மறுத்தால் போராட்டம்: பிரதமர் அலுவலகத்தில் முன்னெடுக்கப்படும்

இந்திராகாந்தியைச் சந்திக்க ஐஜிபி தொடர்ந்து மறுத்தால் போராட்டம்: பிரதமர் அலுவலகத்தில் முன்னெடுக்கப்படும்

ஓன்லைன் மோசடி: 18 அந்நிய நாட்டவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டனர்

ஓன்லைன் மோசடி: 18 அந்நிய நாட்டவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டனர்

மலாக்காவில் போலீஸ் துப்பாக்கிச் சூடு – சுயேட்சை மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்

மலாக்காவில் போலீஸ் துப்பாக்கிச் சூடு – சுயேட்சை மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது