Jul 2, 2026
Thisaigal NewsYouTube
விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த இரண்டு சீன சுற்றுலாப் பயணிகள் கைது
தற்போதைய செய்திகள்

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த இரண்டு சீன சுற்றுலாப் பயணிகள் கைது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.23-

தாவாவிலிருந்து கோத்தா கினாபாலுவிற்குச் சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின் அஞ்சல் வழி மிரட்டல் விடுத்ததாக நம்பப்படும் இரண்டு சீன நாட்டுச் சுற்றுப் பயணிகள் கைது செய்யப்பட்டனர்.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் அதிகாரி செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து சீன நாட்டைச் சேர்ந்த 28 வயது பெண்ணையும், 29 வயது ஆணையும் போலீசார் கைது செய்ததாக தாவாவ் மாவட்ட போலீஸ் தலைவர் ஜஸ்மின் ஹுசேன் தெரிவித்தார். தாங்கள் இருவரும் பக்கத்து பக்க இருக்கையில் அமர்ந்து செல்லும் இருக்கையை மாற்றிக் கொடுக்கும்படி அந்த ஜோடியினர் முன்வைத்த கோரிக்கையை விமானப் பணியாளர்கள் நிராகரித்து விட்டதைத் தொடர்ந்து அவர்களைப் பழிவாங்கும் உணர்ச்சியுடன் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின் அஞ்சல் வழி மிரட்டல் அனுப்பியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று ஜஸ்மின் ஹுசேன் குறிப்பிட்டார்.

அவ்விருவரையும் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி வரை நான்கு நாள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற அனுமதியைப் பெற்றிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்