Mar 21, 2026
Thisaigal NewsYouTube
விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த இரண்டு சீன சுற்றுலாப் பயணிகள் கைது
தற்போதைய செய்திகள்

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த இரண்டு சீன சுற்றுலாப் பயணிகள் கைது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.23-

தாவாவிலிருந்து கோத்தா கினாபாலுவிற்குச் சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின் அஞ்சல் வழி மிரட்டல் விடுத்ததாக நம்பப்படும் இரண்டு சீன நாட்டுச் சுற்றுப் பயணிகள் கைது செய்யப்பட்டனர்.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் அதிகாரி செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து சீன நாட்டைச் சேர்ந்த 28 வயது பெண்ணையும், 29 வயது ஆணையும் போலீசார் கைது செய்ததாக தாவாவ் மாவட்ட போலீஸ் தலைவர் ஜஸ்மின் ஹுசேன் தெரிவித்தார். தாங்கள் இருவரும் பக்கத்து பக்க இருக்கையில் அமர்ந்து செல்லும் இருக்கையை மாற்றிக் கொடுக்கும்படி அந்த ஜோடியினர் முன்வைத்த கோரிக்கையை விமானப் பணியாளர்கள் நிராகரித்து விட்டதைத் தொடர்ந்து அவர்களைப் பழிவாங்கும் உணர்ச்சியுடன் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின் அஞ்சல் வழி மிரட்டல் அனுப்பியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று ஜஸ்மின் ஹுசேன் குறிப்பிட்டார்.

அவ்விருவரையும் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி வரை நான்கு நாள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற அனுமதியைப் பெற்றிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து