கோலாலம்பூர், ஏப்ரல்.29-
கடந்த இரண்டு வாரங்களாக குறைந்து வந்த மானியமில்லாத எரிபொருட்களின் விலை, நாளை ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் மீண்டும் உயர்கிறது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
மானியமில்லாத RON95 எரிபொருள் 10 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 3 ரிங்கிட் 97 சென்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
RON97 எரிபொருள் 5 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 4 ரிங்கிட் 90 சென்னாக விற்பனை செய்யப்படும்.
தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை, ஒரு லிட்டர் 5 ரிங்கிட் 12 சென்னாக மாற்றமின்றி தொடர்கிறது.
எனினும் மானிய விலைக்கு உட்பட்ட BUDI95 திட்டத்தின் கீழ் RON95 எரிபொருள் ஒரு லிட்டர் 1 ரிங்கிட் 99 சென்னாகவும், இதர மானிய டீசல் விலைகள் 2 ரிங்கிட் 15 சென்னாகவும் எவ்வித மாற்றமுமின்றி நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்று நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








