Mar 23, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தானில் 5 மாணவர்களுக்கு டைபாய்டு வைரஸ் காய்ச்சல்
தற்போதைய செய்திகள்

கிளந்தானில் 5 மாணவர்களுக்கு டைபாய்டு வைரஸ் காய்ச்சல்

Share:

கோத்தா பாரு, ஜூலை 03-

கிளந்தான் மாநிலத்தில் இடைநிலைப்பள்ளி ஒன்றில் 22 மாணவர்களில் 5 பேர், typhoid வைரஸ் காய்ச்சலுக்கு ஆளாகியிருப்பதை அம்மாநில சுகாதார இலாகா இயக்குநர் டாக்டர் ஜைனி ஹுசின் தெரிவித்துள்ளார்.

மற்ற மாணவர்களில் 17 பேர் பாசிர் புதே -வில் உள்ள தேங்கு அனிஸ் மருத்துவமனையிலும், தும்பட் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

typhoid வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஜுன் 20 ஆம் தேதி சம்பந்தப்பட்ட பள்ளியின் மாணவர்கள் மற்றும் பணியாளர்களிடம் கோத்தாபாரு சுகாதார அலுவலகம் சோதனை மேற்கொண்டது.. இதில் 22 மாணவர்களுக்கு typhoid காய்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டதாக அவர் கூறினார்.

வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம், வயிற்று வலி, தலைவலி, உடல் அசதி மற்றும் உணவு உட்கொள்ள முடியாத நிலை போன்றவை typhoid -க்கான அறிகுறிகளாகும் என்று டாக்டர் ஜைனி ஹுசின் விளக்கினார்.

Related News