Jul 4, 2026
Thisaigal NewsYouTube
லோரியினால் மோதப்பட்ட இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

லோரியினால் மோதப்பட்ட இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்

Share:

கோத்தா திங்கி, ஜூலை.26-

லோரியினால் மோதப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 1.24 மணியளவில் ஜோகூர், கோத்தா திங்கி, ஜாலான் சுங்கை கோத்தா திங்கி சாலையில் 60.5 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.

இதில் 18 வயது முகமட் அய்சி இக்பால் மற்றும் 19 வயது முகமட் ஐய்மான் ஃபார்ஹான் ஹாலிம் ஆகிய இரு இளைஞர்கள் உயிரிழந்ததாகப் போலீசார் அடையாளம் கூறினர்.

இந்தச் சம்பவம் குறித்து அதிகாலையில் பொதுமக்கள் தங்களுக்கு தகவல் அளித்ததாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் யூசோஃப் ஒத்மான் தெரிவித்தார்.

அந்த இரு மோட்டார் சைக்கிளோட்டிகளை மோதித் தள்ளியதாக நம்பப்படும் லோரி இன்னும் அடையாளம் காணப்படவில்லை. உயிரிழந்த இரு இளைஞர்கள் விபத்து நடந்த பகுதியில் வெவ்வேறு இடத்தில் கடுங்காயங்களுடன் இறந்து கிடந்தனர் என்று யூசோஃப் ஒத்மான் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது