Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக முதியவருக்கு 6 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

Share:

கோத்தா திங்கி, பிப்.27-

தன்வசம் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக முதியவர் ஒருவருக்கு ஜோகூர், கோத்தா திங்கி செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 6 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது. 65 வயது ஓமார் புசாரி என்ற அந்த முதியவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுக்களையும் அவர் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கு தலா மூவாயிரம் ரிங்கிட் அபராதம் என மொத்தம் 6 ஆயிரம் ரிங்கிட் அபராதத்தை நீதிபதி ஹய்டா ஃபாரிட்சால் அபு ஹாசான் விதித்தார்.

கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி கோத்தா திங்கி, லாடாங் பாசீர் பஞ்சாங்கில் எவ்வித பெர்மிட் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கியையும், 108 தோட்டாக்களையும் அந்த முதியவர் தன் வைத்திருந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு