Jul 5, 2026
Thisaigal NewsYouTube
ஜக்குன் மாணவிக்கு மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் படிக்க இடம்
தற்போதைய செய்திகள்

ஜக்குன் மாணவிக்கு மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் படிக்க இடம்

Share:

குவாந்தான், ஜூலை.15-

மலேசியாவில் எல்லா நிலைகளிலும் பின் தள்ளப்பட்ட ஒரு சமூகமாகக் கருதப்பட்ட பூர்வகுடி மக்கள், இன்று எல்லா துறைகளில் முந்திச் செல்லும் சமூகமாக மாறிக் கொண்டு வருகின்றனர்.

ஓராங் அஸ்லி என்று அழைக்கப்படும் பழங்குடி மக்களில் ஜக்குன் சமூகத்தைச் சேர்ந்த முதலாவது மாணவி, பிரிட்டன், மான்செஸ்டர் பல்லைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் உயர்க்கல்வி மேற்கொள்ள இடம் கிடைத்துள்ளது.

கல்வி ஒன்றே வாழ்வியலின் உயர்வு என்பதை அறிந்து கொண்ட சமூகமாக மாறி வரும் ஓராங் அஸ்லி மக்களில், ஜக்குன் சமூகத்தைச் சேர்ந்த 20 வயது ரோஸியானா டான் பெங் ஹாய் என்ற மாணவி, 2024 ஆம் ஆண்டு எஸ்டிபிஎம் தேர்வில் 4.0 CGPA மதிப் பெண்களைப் பெற்று சாதனைப் படைத்தார்.

ஏழ்மையில் உழன்ற அந்த பழக்குடி மாணவி, ஒரு பொருளாதார மேதையாக வேண்டும் என்பது அவரின் லட்சியக் கனவாகும். அதற்குத் தூபம் போட்டது போல் எஸ்டிபிஎம் தேர்வில் மிகச் சிறந்த அடைவு நிலையைப் பெற்றதால் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் இட வாய்ப்பு கிட்டியுள்ளது.

இந்த வாய்ப்பு, ஜக்குன் சமூகத்தின் இளைய தலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டலாக அமையும் என்று அந்த ஓராங் அஸ்லி மாணவி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது