நாட்டின் தேசிய மலையேறும் வீரரான தி. ரவிச்சந்திரன், நான்காவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்து மற்றொரு புதிய சாதனை ஏற்படுத்தியுள்ளார். கடந்த மே 17 ஆம் தேதி நேபாள நேரப்படி மதியம் 12 மணியளவில் இந்த சாதனையை ரவிச்சந்திரன் ஏற்படுத்தியுள்ளார் என்று அவரின் துணைவியார் லீலா ராமமூர்த்தி தெரிவித்தார்.
ரவிச்சந்திரன் நான்காவது முறையாக இந்த சாதனையை நிகழ்த்திய போதிலும், உறைபனி காரணமாக அவரின் விரல்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் எவரெஸ்ட் சிகரத்திலிருந்து ஹெலிகாப்படர் மூலம் காட்மண்டுக்கு கொண்டு வரப்பட்டு, மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நெகிரி செம்பிலான், கோல பிலாவை சேர்ந்தவரான 58 வயதான ரவிச்சந்திரனுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக லீலா ராமமூர்த்தி வெளியிட்டுள்ள ஓர் அறிககையில் தெரிவித்துள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


