Aug 26, 2026
Thisaigal NewsYouTube
உறுப்புக்கட்சிகளுடன் விவாதிக்கப்படும்
அரசியல்

உறுப்புக்கட்சிகளுடன் விவாதிக்கப்படும்

Share:

பினாங்கு, ஜூன் 01-

பினாங்கு, சுங்காய் பக்காப் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுடன் விவாதிக்கப்பட்டப் பின்னரே முடிவு செய்யப்படும் என்று பாரிசான் நேஷனல் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஜாம்ப்ரி அப்துல் காதிர் தெரிவித்தார்.

இந்த இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கம் சார்பாக பாரிசான் நேஷனல் போட்டியிட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்த போதிலும் கட்சியின் தலைமைத்துவத்தைப் பொறுத்தே இவ்விவகாரத்தில் பாரிசான் நேஷனலின் நிலைப்பாட்டை அறிவிக்க முடியும் என்று ஜாம்ப்ரி அப்துல் காதிர் குறிப்பிட்டார்.

இன்று கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் பாரிசான் நேஷனலின் 50 ஆம் ஆண்டு பொன் விழா கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

Related News